சினிமா செய்திகள்

பிக்பாஸ் மலையாளம்: கணவர் இறந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த போட்டியாளர்!

Published

on

பிக்பாஸ் மலையாளம் நிகழ்ச்சி தற்போது 3வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை பாக்கியலட்சுமியின் முன்னாள் கணவர் இறந்து விட்டதாக திடீரென பிக்பாஸ் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான பாக்கியலட்சுமி சமீபத்தில் கன்பெக்சன் அறைக்கு வரவழைக்கப்பட்டார். அப்போது பிக்பாஸ் அவரிடம் உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருக்கிறது என்றும் உங்களது முன்னாள் கணவர் ரமேஷ் குமார் இறந்துவிட்டதாக உங்கள் மகன்கள் கூறியதாகவும் தெரிவித்தார்.

அப்போது கதறி அழுத பாக்கியலட்சுமி தனக்கும் அவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்றும் அதனால் தான் இறுதி நிகழ்ச்சிக்கு இறுதியில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தனது மகன்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அதனால் அவர்களிடம் போனில் பேச அனுமதி வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதனை அடுத்து அழுதபடியே வெளியே வந்த பாக்கியலட்சுமி சக போட்டியாளர்களிடம் தனது முன்னாள் கணவர் இறந்ததை கூறியதுடன் அவருக்கு போட்டியாளர்கள் ஆறுதல் கூறினார்கள். தனது முன்னாள் கணவருக்கு சிறுநீரக கோளாறு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் இறுதிச் சடங்குக்கு செல்லவில்லை என்றால் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சமூகவலைதளங்களில் அவதூறாகப் பேசுவார்கள் என்று கூறியதை அடுத்து சக போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறி, விவாகரத்து ஆகி விட்டதால் நீங்கள் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்கள். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version