சினிமா செய்திகள்
மல்யுத்தமாக மாறிவிட்டது பிக்பாஸ் வீடு: கமல்ஹாசன்
பிக்பாஸ் நிகழ்ச்சி மல்யுத்தம் ஆக மாறிவிட்டது என்றும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இரண்டு விஷயங்களை உணர்த்திய ஆக வேண்டும் என்றும் கமல்ஹாசன் சற்று முன் வெளியான புரோமோ வீடியோவில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக போட்டியாளர்கள் மத்தியில் பிரச்சனைகள் அதிகம் உருவாகி வருகிறது என்பதும், குறிப்பாக காயின் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் சக்தி மற்றும் பொம்மை டாஸ்க்கில் கூடுதலான சண்டைகள் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் ஏற்பட்ட கலவரங்கள் குறித்து என்று கமல்ஹாசன் விசாரணை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய முதல் புரோமோவில் கமலஹாசன் இதுகுறித்து கூறியதாவது: வெளியே புயல் மழை ஓய்ந்த சாயல் தெரிகிறது. ஆனால் வீட்டிற்குள் புயல் சின்னங்கள் உருவாகி இருக்கின்றன. பொம்மைகளை வைத்து விளையாட சொன்ன ஒரே காரணத்திற்காக இவ்வளவு குழந்தைத்தனமாக மாற வேண்டியதில்லை. இப்பொழுது இவர்களுடைய விளையாட்டு மல்யுத்தத்தை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கின்றது. எது எல்லை? எது வரம்பு என்பதை இவர்களுக்கு சுட்டிக் காட்டியே ஆக வேண்டும் அதைச் செய்வோம் என்று கூறியுள்ளார்.
இதிலிருந்து கமல்ஹாசன் என்று போட்டியாளர்களை குறிப்பாக தவறு செய்த போட்டியாளர்களை வறுத்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#BiggBossTamil இல் இன்று.. #Day41 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/CtQEA75ljg
— Vijay Television (@vijaytelevision) November 13, 2021