சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் முதல் சண்டை: இனி அனல் பறக்கும் என எதிர்பார்ப்பு!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை ஆரம்பத்தில் ஒரு சில நாட்கள் சுமுகமாகவும் ஜாலியாகவும் செல்லும் என்பதும் அதன் பின்னர் சண்டைகள் அனல் பறக்கும் என்பதும் தெரிந்ததே. கடந்த சீசனில் முதல்முறையாக அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி சண்டையை ஆரம்பித்த நிலையில் இந்த சீசனில் முதல் சண்டை ஆரம்பித்துள்ளது.

தற்போது போட்டியாளர்கள் தங்களுடைய சொந்தக் கதை, சோகக் கதையை கூறி வருகின்றனர் என்பதும் ஒரு சில நெகிழ்ச்சியாகவும் சிலர் போரடிக்கும் வகையிலும் கதைகளை கூறி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இன்று வெளியான முதல் புரமோவில் இமான் அண்ணாச்சி தன்னுடைய சோக கதையை கூறுகிறார். அப்போது நிரூப் சிரித்ததாக தெரிகிறது. இதனையடுத்து சிபிச்சக்கரவர்த்தி அவரிடம் ஏதோ சொல்ல இதனால் சண்டை மூள்கிறது.

இன்னொரு பக்கம் நமிதா மாரிமுத்து ’கஷ்டப்படுகிறோம் கஷ்டப்படுகிறோம் என்று எல்லாரும் சொல்கிறார்கள், கஷ்டப்பட்டால்தான் ஒரு நல்ல நிலைக்கு வரமுடியும் என்று கூற, அபிஷேக் ராஜா இன்னொருபுறம் நிரூப் இடம் வாக்குவாதம் செய்ய, மொத்தத்தில் இன்றைய முதல் புரமோவில் இருந்து பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் இடையே சண்டை தொடங்கிவிட்டது என்பது உறுதியாகி உள்ளது.

இந்த சண்டை நீடிக்குமா? பிக் பாஸ் போட்டியாளர்களிடையே அணிகள் பிரியுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version