சினிமா செய்திகள்

திருமணமான ஒருசில நாட்களில் தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் பிரபலம்!

Published

on

திருமணமான ஒரு சில நாட்களில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் கன்னடம் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை சைத்ரா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொழிலதிபர் நாகார்ஜுனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆனதில் இருந்தே இருவரும் வாழவில்லை என்றும் கருத்து வேறுபாடுகள் உடன் இருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று திடீரென நடிகை சைத்ரா பாத்ரூமுக்கு பயன்படுத்தும் பினாயிலை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இதனை அடுத்து ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவருடைய கணவர் நாகார்ஜூனா அவர்களிடம் தீவிர விசாரணை செய்து கொண்டிருக்கின்றனர். திருமணமான ஒரு சில நாட்களில் தற்கொலை முயற்சி செய்யும் அளவுக்கு என்ன பிரச்சனை என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.

இருப்பினும் நடிகை சைத்ரா கண்விழித்து போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தால் மட்டுமே தற்கொலை முயற்சிக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version