சினிமா செய்திகள்

‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை: திடீரென சமாதானமான பிக்பாஸ் போட்டியாளர்கள்!

Published

on

விக்ரமன் இயக்கிய ’வானத்தைப்போல’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு கேரக்டர் கூட நெகட்டிவாக இருக்காது என்பதும் அனைவரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்பதும் அதனால் ’எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்ற பாடல் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றது என்பதும் தெரிந்தது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய புரமோக்களை பார்த்து இந்த பாடலை நெட்டிசன்கள் பதிவு செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஆரம்ப நாட்களில் மட்டும் போட்டியாளர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பதும்,அதன்பின்னர் சண்டை சச்சரவு கூச்சல் குழப்பம் ஏற்படும் என்பதுதான் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

அதே போல் இந்த சீசனிலும் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை போட்டனர் என்பதும் குறிப்பாக தாமரை மற்றும் பிரியங்கா இடையே ஏற்பட்ட சண்டை முடிவுக்கு வராது என்றும் கூறப்பட்டது.

அதேபோல் நேற்று திடீரென பாவனி ஆவேசமாக பொங்கினார் என்பதும் ராஜு மற்றும் சிபியை அவர் வறுத்து எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று வெளியான முதல் புரமோவில் திடீரென ராஜூ மற்றும் சிபியை பாவனி கட்டிப்பிடித்துக் கொண்டு சமாதானம் செய்தார்.

அதேபோல் இரண்டாவது புரமோவில் பிரியங்கா மற்றும் தாமரை ஆகிய இருவரும் கட்டிப்பிடித்து சமாதானம் செய்து கொள்வதை பார்க்கும்போது வானத்தைப்போல விக்ரமன் தான் ஞாபகம் வருகிறார் என நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். ஆனால் வெள்ளிக்கிழமை ஆகிவிட்டால் போட்டியாளர்கள் பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவார்கள் என்றும் ஒருசிலர் கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர்.

 

 

Trending

Exit mobile version