சினிமா செய்திகள்

பிரியங்கா, அபிஷேக்கிற்கு புதிய பட்டம்: அடுத்த டாஸ்க் ஆரம்பம்!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே பஞ்சதந்திரம் என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த டாஸ்க் இன்னும் முடிவடையவில்லை என்பதும் நேற்றைய நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் அடுத்த டாஸ்க் ஆரம்பமாகி உள்ளது

இந்த டாஸ்க்கின் பெயர் ’விளையாடு அல்லது வெளியே ஓடு’ என்று வைக்கப்பட்டுள்ளது. இதில் பிக்பாஸ் வீட்டில் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக நடந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் யார் யார்? என்றும் அவர்களுக்கு என்ன பட்டம் கொடுக்கலாம்? என்பது குறித்தும் பிக்பாஸ் போட்டியாளர்கள் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து ஒவ்வொரு போட்டியாளரும் மற்ற போட்டியாளர்கள் இருவர் குறித்து கூறி வருகின்றனர். அந்த வகையில் அபிஷேக், நிரூப், ஸ்ருதி, அபினய், பிரியங்கா ஆகியவர்களுக்கு புதிய பட்டங்கள் வழங்கப்படுகிறது

பிரியங்கா மற்றும் நிரூப் ஆகிய இருவரும் இரவில் தூங்காமல் விடிய விடிய பேசிக்கொண்டு பகலில் தூங்குவதால் அவர்களுக்கு ’இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்’ என்ற பட்டம் கொடுக்கப்படுகிறது

அதேபோல் ஸ்ருதி மற்றும் ஐக்கி ஆகிய இருவருக்கும் நானா தான் இருக்கென், அதனால் நான் ஜாலியா பொழுதை கழிக்கிறேன்’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. மேலும் அபிஷேக்கிற்கு எதிர்பார்த்தபடியே ‘மைக் டெஸ்டிங்’ என்ற பட்டமும் அபினய்க்கு Basically I dont know தமிழ் டா’ என்ற பட்டமும் வழங்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version