சினிமா செய்திகள்

பணப்பெட்டியை எடுத்து கொண்டு வெளியேறிய சிபி: எத்தனை லட்சம் தெரியுமா?

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பண பெட்டியை எடுத்துக் கொண்டு ஒரு போட்டியாளர் வெளியே செல்லலாம் என பிக்பாஸ் அறிவித்திருந்த நிலையில் அந்த பணப்பெட்டியை யார் எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வந்தது.

முதலில் 3 லட்சமாக இருந்த பணப்பெட்டி நேற்றைய நிகழ்ச்சி முடியும்போது 9 லட்சம் ஆக மாறியது என்பதும் அவ்வாறு இருந்தும் பண பெட்டியை எடுக்க போட்டியாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் இன்னும் தொகை உயர்ந்தால் பார்க்கலாம் என போட்டியாளர்களில் சிலர் பேசி வந்தார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் உள்ள பணப்பெட்டியின் மதிப்பு 12 லட்சமாக உயர்ந்ததை அடுத்து சிபி அந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேற முடிவு செய்துவிட்டதாகவும் முடிவு செய்து பெட்டியுடன் வெளியேறியதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது.

இறுதிப் போட்டியில் கண்டிப்பாக சிபி தேர்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவர் பண பெட்டியுடன் வெளியேறியது பார்வையார்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ராஜூ அல்லது பிரியங்கா தான் டைட்டிலை வெல்வார் என்ற எண்ணம் கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் வந்துவிட்டதால் பண பெட்டியை எடுத்துக் கொண்டு செல்லும் எண்ணத்தில் தான் இருந்தனர் என்பதும் இருப்பினும் பணத்தின் மதிப்பு உயர வேண்டும் என்பதற்காக காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமீர், பாவனி, நிரூப், சிபி ஆகியோர்களில் ஒருவர் பணப்பெட்டியை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் சிபி பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீதமுள்ள 6 பேர்களில் டைட்டில் வின்னர் யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Trending

Exit mobile version