சினிமா செய்திகள்

வாழ்க்கையில் தனியாக இருக்க வேண்டும் என்பது என் விதியோ? கண்ணீருடன் பவானி ரெட்டி!

Published

on

நான் என் வாழ்க்கையில் தனியாகவே கடைசிவரை இருக்க வேண்டும் என்பதுதான் என் விதியோ என கண்ணீருடன் தனது கதையை தொலைக்காட்சி நடிகை பவானி ரெட்டி பிக்பாஸ் வீட்டில் கூறியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்கள் ஒவ்வொரும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களை சக போட்டியாளர்கள் பதிந்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய முதல் புரோமோ வீடியோவில் நடிகை பவானி ரெட்டி தனது வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவமான கணவர் இறப்பு குறித்து கூறுகிறார். நான் என் கணவரை மிகவும் லவ் பண்ணினேன், நாங்கள் இருவரும் மிகவும் கஷ்டப்பட்டோம், நிறைய கனவு கண்டோம், அப்படி இருக்கும்போது திடீரென என்னை அவர் விட்டு விட்டு சென்றது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் இறந்த போது எனக்கு அழுகை வரவில்லை, கோபம் தான் வந்தது. என்னை இப்படி நடுவில் விட்டுவிட்டு சென்று விட்டாரே என்று அவர் கண்ணீருடன் கூறினார். மேலும் தனது வாழ்க்கையில் இனிமேல்தான் தனியாகத்தான் இருக்க வேண்டும் என்பதுதான் விதியோ என்று அவர் கூறியது அனைவரையும் கலங்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version