சினிமா செய்திகள்

ரூ.11 லட்சத்தை எடுக்க முயற்சிக்கும் அமீர்: பணப்பெட்டியுடன் வெளியேறுவது யார்?

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு ஒரு போட்டியாளர் வெளியேறலாம் என பிக்பாஸ் வாய்ப்பளித்திருக்கும் நிலையில் அந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறுவது யார் என்ற கேள்வி கடந்த 4 நாட்களாக பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.3 லட்சத்துடன் ஆரம்பித்த பணப்பெட்டி மதிப்பு படிப்படியாக உயர்ந்து நேற்றைய நிகழ்ச்சி முடிவடையும் போது 9 லட்சமாக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் போட்டியாளர்கள் யாரும் பணப் பெட்டியை எடுக்க முன்வரவில்லை.

ஆனால் அதே நேரத்தில் பணப்பெட்டியின் மதிப்பு உயர்ந்தால் சிபி, நிரூப், பாவனி உள்பட ஒருசில போட்டியாளர்கள் பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற அமீர் பணப் பெட்டியை எடுக்க வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் திடீரென 11 லட்சத்தை எடுத்துக்கொண்டுதான் வெளியேறுவது தான் புத்திசாலித்தனம் என்று அமீர் தனது சக போட்டியாளர்களிடம் கூறுவது போன்ற காட்சி உள்ளன.

எனவே அமீர் ரூ.11 லட்சம் பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறுவாரா? அல்லது வேறு ஏதேனும் திருப்பம் நடைபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் அதே நேரத்தில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக சமூக வலைதளங்களில் 12 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு சிபி வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version