சினிமா செய்திகள்

அபிஷேக்கை காப்பாற்ற காயினை கொடுக்க முன்வந்த பாவனி: பிக்பாஸ் மறுப்பு!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று அபிஷேக் குறைந்த வாக்குகள் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அவரை காப்பாற்ற எடுத்த முயற்சிக்கு பிக்பாஸ் மறுப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் 9 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டனர் என்பதும் அதில் குறைந்த வாக்குகள் அடிப்படையில் சின்ன பொண்ணு மற்றும் அபிஷேக் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற வேண்டும் என்ற நிலையில் கமல்ஹாசன் அபிஷேக் பெயரை அறிவித்ததை அடுத்து அவர் நேற்று வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அபிஷேக் வெளியேற போகிறார் என்ற செய்தி வெளியானதும் பிரியங்கா குலுங்கி குலுங்கி அழுதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் அபிஷேக் வீட்டில் இருக்கும்போது அவரை குறை சொல்லிக் கொண்டிருந்த போட்டியாளர்கள் அவர் வெளியே போகிறார் என்றது, தங்களிடமிருந்த காயினை கொடுத்து அவரை காப்பாற்ற முன் வந்ததும் ஆச்சரியத்தை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பாவைரெட்டி தன்னுடைய காயினை எடுத்து வந்து அபிஷேக்கிடம் கொடுத்து வீட்டில் நீ இருக்க வேண்டும் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அபிஷேக் ’மக்கள் என்னை வீட்டில் இருந்து வெளியே செல்ல சொல்லிவிட்டார்கள், அதற்கு மேல் நான் இருந்தால் என்னுடைய கவுரவம் என்ன ஆவது? என்று காயினை பெற்றுக் கொள்ள மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸில் குரல் ஒலித்தது. அதில் இப்போது காயினை பயன்படுத்த முடியாது எனக் கூறியதை அடுத்து அபிஷேக் நேற்று வேறு வழியில்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அபிஷேக்கை காப்பாற்ற பிரியங்கா உள்பட பலர் நேற்று முயற்சித்தும் முடியாமல் போனது அவருடைய துரதிஷ்டமாகவே கருதப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version