சினிமா செய்திகள்

அடிக்க அடிக்க வந்துகிட்டே இருப்பேன்: அபிஷேக் பேச்சை விமர்சனம் செய்யும் ராஜூ!

Published

on

அடிக்க அடிக்க நான் வந்து கொண்டே இருப்பேன் என்று ஒரு பக்கம் அபிஷேக் ஆவேசமாக பேச, இன்னொரு பக்கம் அவரது பேச்சை விமர்சனம் செய்து ராஜூ ஜெயமோகன் பேசியுள்ள வீடியோ இன்றைய 2-வது புரமோவில் வந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் உள்ள 18 போட்டியாளர்களில் நமீதா மட்டும் வெளியேறிய நிலையில் 17 போட்டியாளர்களும் தங்களுடைய கதைகளை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று காலை முதல் புரமோவில் தாமரைச்செல்வி தன்னுடைய கதையை மிகவும் சோகமாக கூறினார்.

தன்னுடைய பையனைத்தான் பார்க்கவே இல்லை என்றும், அவனைத் தேடிப் போனபோது நான் அங்கேயே இருக்கிறேன் என்று சொல்லி விட்டார் என்றும், என் பிள்ளையை பார்த்து 4 மாசம் ஆச்சு என்றும், அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும், போன்ல பேச மாட்டான் என்னை பார்க்க மாட்டான் என்றும், நான் தப்பு பண்ணிட்டேன் நினைக்கிறான் என்றும் அவனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே நான் பிக்பாஸ் வந்தேன் என்று கதறி அழுத கண்ணீருடன் கூறினார்.

இதனை அடுத்து சற்று முன் வெளியான இரண்டாவது புரமோவில் அபிஷேக் தன்னுடைய கதையை ஆவேசமாக கூறி வருகிறார். கடவுள் மேல வைக்கிற நம்பிக்கை மேல நம்பிக்கை இருக்கு. அந்த பில்டிங்ல இருக்கிற ஒவ்வொரு ப்ரிக்ல இருக்கிறதும் எங்கப்பா இரத்தம். எவனையும் ஏமாத்தி சம்பாதிக்கல. அடிக்க அடிக்க நான் வந்துட்டே இருப்பேன். இதுதான் நான். புடிச்சிருக்கோ புடிக்கலையோ, வேற வழி இல்ல என்று கூறிய நிலையில் அபிஷேக்கின் கதையை ராஜுவும் இமான் அண்ணாச்சியும் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றனர்.

என்சைக்ளோபீடியா விக்க வர்றவங்க சில பேர் வருவாங்க, வேண்டாம்னு சொன்னாலும் வலுக்கட்டாயமா வித்துட்டு போயிடுவாங்க. அது மாதிரி இருந்துச்சு அவன் கதை’ என்று ராஜூ சொல்ல, ‘அவன் சொன்ன கதையில எனக்கு பிடித்தது ஒரே ஒரு லைன் மட்டுமே என்றும் அந்த இரண்டு வருஷத்தில் மீட்டேன்னு சொன்னான் பாரு அது தான் ஹைலைட் என்று இமான் அண்ணாச்சியும் விமர்சனம் செய்தனர். இந்த இரண்டு புரமோ வீடியோக்களும் தற்போது வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version