டிவி

மீம்ஸால் கடுப்பான பிக் பாஸ் அர்ச்சனா! திடீர் முடிவால் ரசிகர்கள் ஷாக்!

Published

on

அர்ச்சனா தன்னை பற்றிய மோசமான ட்ரோல்களை சகித்து கொள்ள முடியாமல் ட்விட்டரில் இருந்து வெளியேறுவதாகக் கூறியுள்ளார்.

சமீபத்தில் லாக்டவுனை போர் அடிக்காமல் வைத்துக் கொண்டது பிக்பாஸும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிதொடரும் தான். இந்த பிக்பாஸ் சீசன் 4 இல் நெடிசன்களால் பரப்பரப்பாகப் பேசபட்டவர் அர்ச்சனா. குழு சேர்த்து விளையாடுதல், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆதரவாக பேசுதல் என பலவிதமான குற்றசாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டன.
அவர் மற்ற போட்டியாளர்களுக்கு டாஸ்குகளில் டப் கொடுத்த நிலையில் திடீரென எலிமினேட் செய்யப்பட்டார். அவரது எலிமினேசன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இந்நிலையில் அர்ச்சனா பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகி வெளியே வந்த பிறகு சமூக வலைத்தளங்களில் பல பதிவுகளை போட்டு வருகிறார். அவற்றை நெட்டிசன்கள் பலர் ட்ரோல் செய்து வருகின்றனர். இதனால் கோபமடைந்த அர்ச்சனா சமூகவலைத் தளங்களில் இருந்து விலகுவதாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘என்னால் இதற்கு மேல் விருப்பும் வெறுப்புமான விவதாத்தை கேட்க முடியாது. டுவிட்டரில் இருந்து வெளியேறுகிறேன். நான் இவ்வாறு டுவிட்டரில் இருந்து வெளியேறுவதை கொண்டாடும் நபர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன், நான் இன்னும் அசுர வலிமையுடன் திரும்பி வருவேன். குட்பை ட்விட்டர்” இவ்வாறு அர்ச்சனா கூறி இருக்கிறார்.

seithichurul

Trending

Exit mobile version