டிவி

தொடங்கியது எவிக்‌ஷன்.. அதிரடி காட்டும் பிக்பாஸ்!

Published

on

பிக்பாஸ் சீசன் 4-ல் நேற்று தங்கள் வாழ்க்கையில் நேர்ந்த பிரச்னைகள் அதிலிருந்து மீண்டது எப்படி போன்ற உத்வேகம் அளிக்க கூடிய கதைகளைப் போட்டியாளர்கள் பகிர்ந்துகொண்டனர்.

அதன் முடிவு இன்று வெளியாகிறது. அதற்கான முன்னோட்டம் தான் இன்றைய முதல் ப்ரோமோ. இந்த போட்டியின் முடிவை வெளியிட்ட பாலாஜி, “ஒருத்தர் சொல்லும் கதையும், இன்னொருத்தர் சொல்லும் கதைகளும் மிகவும் உத்வேகம் அளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும். சனம் சொன்ன கதையில் மேலே இருந்து கீழே விழுந்துவிட்டார்கள் 14 மாதங்களுக்குப் பிறகு தான் எழுந்து உட்கார்ந்ததாகக் கூறினார்கள்.

ஆனால், ஆரி ப்ரோ சொனா கதை மிகவும் உத்வேகத்தை அளித்தது. 10 பேர் கேட்டால், அந்த 10 பேருக்கும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். கேப்ரில்லா, சனம், ரேகா, சம்யுக்தா 4 வரும் தோல்வி அடைந்ததாகக் கூறுகின்றார்.

அடுத்து பேசும் பிக்பாஸ், இவர்கள் 4 வரும் அடுத்த வாரம் தொடங்க இருக்கும் எவிக்‌ஷனுக்கு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறுகின்றார்.

எவிக்‌ஷனுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களை நிரூபிக்க இந்த வாரம் கடுமையாகப் போட்டிப் போட வேண்டி இருக்கும். எனவே இன்று முதல் பிக்பாஸ் வீடு கலைக்கட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

seithichurul

Trending

Exit mobile version