டிவி

குறும்படம் என்ன நெடும் படமே போடுங்கள்.. பிக்பாஸ் சீசன் 4-ல் தொடங்கிய முதல் சண்டை!

Published

on

பிக்பாஸ் சீசன் 4-ன் முதல் சண்டை அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி இடையில் தொடங்கியுள்ளது.

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் வெளியாகும் ப்ரோமோக்களில், ஏதேனும் ஒன்றில் சண்டை இருப்பது போன்று வந்து விடும். அப்படி பிக்பாஸ் சீசன் 4-ன் 3 வது ப்ரோமோவில் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி இடையில் சண்டை தொடங்கியுள்ளது.

சுரேஷ் சக்கரவர்த்தி நான் செய்தி வாசிப்பாளர்களிடம் பேச மாட்டேன். அவர்கள் பேசும் போது எச்சில் தெறிக்கும் என்று சொன்னதாகவும், அப்படி நீங்கள் எப்படி சொல்லாம் என்று அனிதா சம்பத்துடன் அனிதா சம்பத் கேட்கிறார்.

அதற்குப் பதில் அளித்த சுரேஷ், தான் அப்படி கூறவில்லை என்று மறுக்கிறார். மேலும் முயலுக்கு 3 கால் என்பது போல பேசாதீர்கள் என்று கூறுகிறார். உடனே அனிதா சம்பத் நீங்கள் அப்படிதான் பேசினீர்கள். குறும்படம் ஒன்று போட்டால் தெரிந்துவிடும் என்று கூறுகிறார்.

குறும்படம் என்ன, நெடும் படமே போடுங்கள் என்று சுரேஷ் சக்கரவர்த்தி அந்த இடத்தை விட்டு வெளியேறுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 ஞாயிற்றுக்கிழமை தொடங்கியதிலிருந்து, ஒரு சில உரசல்கள் ஏற்பட்டு இருந்தாலும், இதுதான் முதல் சண்டையாக இருக்கும். போட்டியாளர்கள் அனைவரும் கடந்த 3 சீசன்களை பார்த்துவிட்டு வீட்டிற்குள் வந்துள்ளதால் கவனமாகச் செயல்படுவது போலவே தோன்றுகிறது. சண்டை ஆரம்பித்துள்ளதால் போட்டி இன்னும் விருவிருப்பாகச் செல்லும் என்று எதிர்பார்க்கலாம்.

seithichurul

Trending

Exit mobile version