டிவி

பிக்பாஸ் சீசன் 4.. அம்மா செண்டிமென்ட்டை தொடங்கி வைத்த அனிதா சம்பத்!

Published

on

பிக்பாஸ் சீசன் 4-ல் அம்மா செண்டிமென்ட்டை தொடங்கி வைத்துள்ளார் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு போட்டி என்றாலும் அதில் பங்கேற்க வருபவர்கள் அப்பா, அம்மா, அண்ணா, தம்பி, தங்கச்சி போன்ற செண்டிமெண்ட்களில் சிக்கிக்கொள்வது ஏன் என்ற கேள்வி எழுவதுண்டு.

மேலும் இப்படி பிக்பாஸ் வீட்டில் உறவு முறைகளைக் கொண்டாடத் தொடங்கி, அதுவே நாளடைவில் பெரும் சர்ச்சைகளையும் ஏற்படுத்துவதுண்டு.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோவில், நேற்றைய நிகழ்ச்சியில் இடையில் முடிந்த விளையாட்டின் தொடர்ச்சியாக உள்ளது. அதில் நிஷா தனது அம்மா போல இருப்பதாகக் கூறும் அனிதா சம்பத், எனது அம்மா கருப்பாக இருப்பார். அதனால் எனது பள்ளி காலம் முதல் எந்த ஒரு நிகழ்வுகள் என்றாலும் அவர் வர மாட்டார். தான் கருப்பு என்ற தாழ்வுமனப்பான்மைக்குள் கூனிக்குறுகி இருப்பார்.

ஆனால் நிஷா அக்கா, தான் கருப்பாக இருப்பதையும், பாசிடிவாக எடுத்துக்கொண்டு, நகைச்சுவை கலாட்டா என்று சந்தோஷமாக இருக்கிறார். இவரைப் பார்த்து எனது அம்மாவும் மாற வேண்டும் என்று கண்ணீர் மல்க பேசி கண்ணீர் விட, நிஷா அவரை கட்டிப்பிடிப்பது போன்ற காட்சிகள் அரங்கேறியுள்ளன.

வரும் நாட்களில் போட்டிக்கு வந்த இவர்கள் பந்த பாசங்களை உருவாக்காமல், தங்களை எப்படி முன்னிறுத்தி வெல்லப்போகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தினால் சென்ற சீசன் போல தொய்வில்லாமல் நிகழ்ச்சி செல்லும் என்று எதிர்பார்க்கலாம்.

seithichurul

Trending

Exit mobile version