டிவி

மீண்டும் வரிசை படுத்துங்கள் டாஸ்க்.. நைட்டு ஃபுள்ளா புலம்பிய பிக்பாஸ் போட்டியாளர்கள்!

Published

on

பிக்பாஸ் வீட்டில் முதல் சீசனில் மிகப் பரபரப்பை ஏற்படுத்திய வரிசை படுத்தும் டாஸ், நடப்பு சீசனில் உப்பு சப்பு இல்லாமல் போனது.

ஆனால் இந்த முறை போட்டியாளர்கள் சண்டையிடும் அளவிற்கு வரிசை படுத்தும் டாஸ்க் நடந்துள்ளது போல, இன்றைய இரண்டாம் ப்ரோமோவில் தெரியவந்துள்ளது.

லக்சரி பட்ஜெட் டாஸ்க் முடிந்த நிலையில், அதில் முழு ஈடுபாடு காட்டிக்கொண்டவர்களை வரிசை படுத்தும் படி டாஸ்க் அமைக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக ப்ரோமோவில் இடம்பெற்றுள்ள ரமேஷ், பாலாஜியை பார்த்து நீ பாட்டுக்கு பத்த வசிட்ட, ஆரி நைட் புள்ளா புலம்பிக்கிட்டு இருக்காரு.

அர்ச்சனா, அனிதா, சனம் ஆரி என நால்வர் போட்டி போட, 3-ம் இடத்தில் பாலாஜி நிற்கிறார். ரியோ சின்ன பசங்கள் போல தாவி குதித்து காலியாக உள்ள எண்களுக்குச் சென்று விளையாடிக் கொண்டு இருக்கிறார். பாலாஜி சேவை மைய அதிகாரிக்குப் பேச வாய்ப்பே கொடுக்கவில்லை. ஆனால் அதை ஒப்புக்கொள்ளாமல் வீட்டில் உள்ளவர்களுடன் சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறார்.

இந்த டாஸ்கின் முடிவில் கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டில் பெரும் சர்ச்சை எழும் என்பதில் சந்தேகமில்லை.

Trending

Exit mobile version