டிவி

அப்படி சொன்ன ரம்யா பாண்டியன்.. இப்படி செய்யலாமா?

Published

on

இடுப்பழகை காண்பித்துப் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். பின்னர் விஜய் டிவியின் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று, தற்போது பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளராக வந்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4 விட்டில் நுழையும் முன்பு வெளியான ரம்யா பாண்டியனின் முன்னோட்டத்தில், தன்னுடையை இடுப்பைக் காட்டும் கிளாமர் புடைவை போட்டோ ஷூட்டில் எனக்கு முதலில் விருப்பம் இல்லை. ஆனால் அது வைரலானது. அதன்பின்பு அதை போன்ற போட்டோஷூட்டை முழுமையாகத் தவிர்த்தேன். எனக்கு கிளாமரில் விருப்பம் இல்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், பீபாஸ் வீட்டின் முதல் நாள் அவர் அணிந்திருந்த உடையைப் பார்த்த பார்வையாளர்கள், கிளாமர் மற்றும் இடுப்பைக் கட்ட விருப்பம் இல்லாத ரம்யா பாண்டியன் எப்படி இப்படி ஒரு உடையை அணிந்தார் என்ற கேள்வியும் எழுந்தது. அப்படி சொல்லிவிட்டு இப்படி செய்யலாமா ரம்யா பாண்டியன்.

மேலும், பிக்பாஸ் விட்டின் முதல் நாளின் முதல் விளையாட்டு ஒன்று நடைபெற்றது. அது பிக்பாஸ் வீட்டின் இந்தவார தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய போட்டி என்பதை தெரியாமல் அனைவரும் பங்கேற்றனர்.

பிக்பாஸ் வீட்டின் கார்டன் ஏரியாவில், போடப்பட்டு இருந்த சதுரத்தினை சுற்றி அனைவரும் நின்றனர். அதன் நடுவில் ஒரு பையினுல் ஏதோ கட்டப்பட்டு இருந்தது.

அது என்னவாக இருக்கும் என்று இருக்கும் போது, பிக்பாஸ் அதை யாரேனும் ஒருவர் திறக்கும் படி கூறினார். அடுத்த நொடியில் ரியோ ராஜ் அதை சென்று திறந்தார். கீழ் பல வண்ணஙளில் பந்துகள் கீழ் விழுந்துன. கடைசியில் ரம்யா பாண்டியனை தவிரப் பிற அனைவரிடமும் பந்துகள் இருந்தன.

பந்து கையில் இல்லாத ரம்யா பாண்டியனை உள்ளே விக்பாஸ் கன்ஃபசன் அறைக்கு அலைக்க, ஏதோ டாஸ்க் கொடுப்பார் என்று பார்த்தால் நீங்கள் தான் பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவர் என்று கூறிவிட்டார். மேலும் வீட்டை இந்த ஒரு வாரத்திற்கு நிர்வகிக்கும் பொறுப்பை அவரிடம் கொடுக்க, வீட்டின் சமையல், கூட்டல் பெருக்கல் பணிகளை அனைவருக்கும் பகிர்ந்து வழங்கினார்.

Trending

Exit mobile version