டிவி

பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறும் நபர் இவர்தான்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published

on

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வெற்றிகரமாக 70 நாட்களை நெருங்கியுள்ளது.

சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டில் டவுள் எவிக்‌ஷன் நடைபெற்ற நிலையில் இந்த வாரம் ஒரு நபர் மட்டுமே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளார்.

வெள்ளிக்கிழமை வரை ஏடிகே குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேற உள்ள போல இருந்தது. ஆனால் விக்ரமுடன் ஜனனி டீமான் – ஏஞ்சல்ஸ் டாஸ்கில் ஏமாற்றி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வாக்கெடுப்பு ஜனனிக்கு எதிராகத் திரும்பியாக கூறப்படுகிறது.

எனவே இன்று நடைபெற உள்ள இந்த வாரத்துக்கான எவிக்‌ஷனில் ஜனனி வெளியேறுவார் என கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜி.பி.முத்து முதலில் தானாகவே முன்வந்து வெளியேறினார். முதலில் நடைபெற்ற எவிக்‌ஷனில் சாந்தி மாஸ்டர் வெளியேறினார். அசல் கோளாறு இரண்டாவது எவிக்‌ஷனில் வெளியேறினார். தொடர்ந்து ஷெரினா, மஹேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி உள்ளிட்டவர்கள் வெளியேறினார்கள்.

சென்ற வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ராம் மற்றும் ஆயிஷா இருவரும் வெளியேறினார்கள். இந்த வாரம் ஜனனி குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறுகிறார்.

மேலும் இவர் பிக்பாஸ் வீட்டிலிருக்க இவருக்கு ஒரு நாளைக்கு 21 ஆயிரம் முதல் 26 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version