டிவி

இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் யார் தெரியுமா?

Published

on

இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முன்பு இருந்த 5 சீசன்களை விட ஒவ்வொரு நாளும் பரபரப்பாக சென்றுகொண்டு இருக்கிறது.

நடப்பு பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதலவாகதாக சாந்தி மாஸ்டர் வெளியேறினார். தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் மைனா நந்தினி போட்டியாளராக அறிமுகமாகினார். பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் வாய்ப்பு அதிகம் இருந்து ஜிபி முத்து, தனது மகன் மீது இருந்த அதீத பாசம் காரணமாகத் தாமாக முன்வந்து வெளியேறினார்.

பின்னர் நடைபெற்ற எவிக்‌ஷன் நிகழ்வில் அசல் கோளாறு, அவர் செய்த கோளாறு காரணங்களுக்காக வெளியேறினார். அதற்கு அடுத்த வார எவிக்‌ஷனில் ஷெரிலினா குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினார்.

சென்ற வாரம் விஜே மஹேஸ்வரி குறைந்த வாக்குகள் பேற்று வெளியேறினார்.

இந்த வாரம் நடைபெற்ற நாமினேசனில் இருந்து நிவாஷினி வெளியேறியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அசல் கோளாறு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதிலிருந்து சோகமாக இருந்து வந்த நிவாஷினி இன்று வெளியேறுகிறார்.

பிக்பாஸ் விட்டை வீட்டு வெளியில் வந்த பிறகு நிவாஷினி – அசல் கோளாறு நட்பு தொடருமா என பொருத்து இருந்து பார்ப்போம்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version