டிவி

பிக்பாஸ் சீசன் 4-ன் கடைசி வெளியேற்றம் ’ஷிவானி’!

Published

on

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் ஷிவானி நாராயணன் வெளியேறினார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி நிறைவு பெறும் தறுவாயில் உள்ளது. இந்த சீசனின் கடைசி எலிமினேஷனில் ஷிவானி வெளியேறுவார் என்று கணிக்கப்பட்டு இருந்தது. அதை உறுதி செய்யும் வகையில் ஷிவானி வெளியேறினார்.

சோம், ஆரி, பாலாஜி, ரியோ, ரம்யா, கேபி 5வரும் பிக்பாஸ் சீசன் 4-ன் இறுதிச் சுற்றுக்குச் சென்றுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் சொந்த அடையாளங்கள் எதுவும் இல்லாமல் பாலாஜிக்கு வேலை செய்வதற்காக மட்டுமே ஷிவானி பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பதாக நெட்டிசன்கள் தொடர்ச்சியாகக் கடுமையாக விமர்சனம் செய்துவந்தனர்.

ஃப்ரீஸ் டாஸ்க்-ன் போது கூட ஷிவானியின் அம்மாவும் வீட்டுக்குள் நுழைந்து கத்த ஷிவானியின் அத்தனை வாய்ப்புகளும் தொடர்ந்து உடைந்து கொண்டே வந்தன.

பிக்பாச் சீசன் 4-ன் டைரக்ட் ஃபினாலே கார்டுக்கான போட்டியின் கடைசி சுற்றில், ஷிவானி கடுமையாகப் போட்டியிட்டார். அப்போது தன் அவரது முழு திறமையும் வெளிகொண்டு வரப்பட்டது என்றும் கூறப்பட்டது.

பிற பிக்பாஸ் போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது ஷிவானி யார் மனதையும் புன்படுத்தாமல் தனது விளையாட்டை விளையாடினார் என்று கூறலாம். அதை கமல் ஹாசனும் மேடையில் சுட்டிக்காட்டினார்.

seithichurul

Trending

Exit mobile version