டிவி

#BiggBoss – ‘ஆம்பள பயதானடா நீ..!’- மீண்டும் ஆரி vs பாலா

Published

on

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில், இந்த வாரம்தான் கடைசி எவிக்‌ஷன் இருக்கப் போகிறது. இதற்குப் பின்னர் அனைவரும் இறுதிச் சுற்றுப் போட்டியாளர்களாக இருப்பார்கள். அந்த நேரத்தில் டைட்டில் ஜெயிப்பதில் அனைவருக்கும் இடையில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதே பிக் பாஸ் டைட்டில் வெல்வதில் ஆரிக்கும் பாலாவுக்கும் இடையில்தான் போட்டி நிலவும் என்று முணுமுணுக்கப்படுகிறது. ஆரியின் நேர்மையான பங்கேற்புக்காக ஒரு பக்கம் அவருக்கு ஆதரவு பெருகுகிறது என்றால், இன்னொரு பக்கம் பாலாவின் விடா முயற்சிக்கும் ஃபேன்ஸ் அதிகரித்து வருகின்றனர். இருவரின் ‘ஆர்மிகளும்’ சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளனர்.

இதற்கு ஏற்றாற் போல பிக் பாஸ் வீட்டுக்கு உள்ளேயும் இருவருக்கும் இடையில் போட்டி அதிகரித்து வருகிறது. இன்றைய போட்டியில் இருவருக்கும் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆரி, ‘ஓடி விளையட மாட்டியா நீ’ என்று கொதிக்கிறார். அதற்கு பாலா, ‘எனக்கு எது பலமோ, அதுக்கு ஏத்தா மாதிரிதான் விளையாடுவேன்’ என்கிறார். இதனால் உஷ்ணமடையும் ஆரி, ‘ஆம்பள பயதான நீ, ஓடி விளையாட தெரியாது?’ என்று படபடக்கிறார். இருவருக்கும் இடையிலான வாக்குவாதத்தோடு இன்றைய பிக் பாஸ் வீடு ரணகளம் ஆகியுள்ளது.

Trending

Exit mobile version