டிவி
விவாத மேடை என கூறிவிட்டு கோர்ட்டை காண்பித்த பிக்பாஸ்.. ஜட்ஜானார் சுச்சித்ரா.. இன்று கண்டிப்பாகச் சண்டைக்கு கிராண்டி!
பிக்பாஸ் வீட்டின் இந்த வாரத்துக்கான விளையாட்டுகள் தொடங்கியுள்ளன.
முதல் போட்டியின் போதே, சண்டை சூடுபிடிக்கும் போல உள்ளது. விவாத மேடை, பிக்பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும், வீட்டில் உள்ள மற்றொருவர் மீது கருத்து வேறுபாடுகளை கன்ஃபசன் அறைக்குச் சென்று பதிவு செய்ய வேண்டும்.
இவர்களுக்கு உள்ள கருத்து வேறுபாடுகளை பிக்பாஸ் நீதிமன்றத்தில் வைத்து தீர்வு காணப்படும். நீதிபதியாக பிக்பாஸ் வீட்டின் புதிய வரவாக இடம்பெற்றுள்ள சுச்சித்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்படி புதியதாக பிக்பாஸ் வீட்டில் வருபவர்களுக்கு, பிக்பாஸ் போட்டிகளின் நடுவர் பதவி வழங்குவதும், அதன் மூலம் சர்ச்சைகளும் எழும். அர்ச்சனாவுக்கு எப்படி பட்டி மன்றம் நடுவர் பதவியோ, அப்படி சுத்திராவுக்கு நீதிபதி பதவி வழங்கப்பட்டுள்ளது.
முதல் வழக்கே, சனம் ஷெட்டி பாலாவை எட்டி உதைத்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதில் தான் எட்டி உதைக்கவில்லை, சும்மா இப்படி காலை தூக்கி இடித்தேன் என்று விளக்கம் அளிக்கிறார் சனம். இது சரியல்ல என்று சனம் ஷெட்டியை கடிந்துகொள்ளும் நீதிபதி சுச்சித்ரா, அவருக்குத் தண்டனை வழங்குவார் என்பது போல உள்ளது. என்ன தண்டனை என்று இரவு தெரியும்.
பின்னர் இது எனக்குச் சரியாகத் தெரியவில்லை என்று ஆரி கூறுவது போலவும், சைலன்ஸ் என்று நீதிபதி சுச்சித்ரா கூறுவது போலவும் இன்றைய முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.
ஆக பிக்பாஸ் வீட்டில் இன்று சண்டைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் நீதிபதி சுச்சித்ரா அனைவரையும் எப்படி நாட்டாமை செய்து சமாளிக்கப்போகிறார் என்று பார்ப்போம்.