டிவி

“சொல்லுடா..!”- கோபத்தில் கத்திய ஆரி; பொங்கிய பாலா!!!

Published

on

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் இன்றைய ப்ரொமோவில், ஆரிக்கும் பாலாவுக்கும் நேரடியாக சண்டை வெடித்துள்ளது. இதனால், இன்றைய பிக் பாஸில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.

இன்னும் ஒரு சில வாரங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இருக்கிறது. இதுவரை நடந்தவைகளை வைத்துப் பார்க்கும் போது ஆரி அல்லது பாலா, டைட்டிலை வெல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக ஆரிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள். இந்த காரணத்தினால் அவர் எத்தனை முறை நாமினேட் செய்யப்பட்டாலும், முதலில் காப்பாற்றப்படுகிறார்.

அவருடன் மோதி அனைத்துப் போட்டியாளர்களும் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் ஆரிக்கு நேரெதிர் துருவத்தில் இருக்கும் பாலா, முதலிலிருந்தே அவரை எதிர்த்து வருகிறார். தற்போது இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

இன்றைய ப்ரொமோவில், பாலாவையே ஆரி மீண்டும் நாமினேட் செய்கிறார். ஏன் இந்த முடிவை அவர் எடுக்கிறார் என்பது குறித்தும் பேசுகிறார். இதனால் கொதிப்படையும் பாலா, ஆரியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஆரியும் உணர்ச்சி வசப்பட்டு, பாலாவை சாடுகிறார். இதனால் இருவரும் ஒருவரையொருவர் அருகில் வந்து முரைத்துக் கொள்கின்றனர். மிகுந்த உஷ்ணமான கணத்தில் ப்ரொமோ கட் செய்யப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version