டிவி

ஆரிக்கு எதிராக அணி சேரும் ரம்யா – ஷிவானி…. அடுத்து என்ன நடக்கப்போகுதோ..? #BiggBoss4

Published

on

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன், விறுவிறுப்புக்குப் பஞ்சாமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. சென்ற வார நாமினேஷன்படி, அனிதா சம்பத் பிக் பாஸ் வீட்டிலிருந்து எவிக்ட் செய்யப்பட்டார். இந்த வாரமும் எவிக்‌ஷன் இருக்கும் என்பதால், பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்கிறது பிக் பாஸ்.

அனிதா, எவிக்ட் செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம், அவர் ஆரியை எதிர்த்ததுதான் என்று சொல்லப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக நடிகர் ஆரிக்குதான் இருப்பதிலேயே அதிக ரசிகர்கள் உருவாகியுள்ளதாக தெரிகிறது. அதற்கு காரணம், அவர் எப்போதும் அறம் மற்றும் நியாயம் குறித்துப் பேசி, விடா முயற்சியுடன் போட்டியை விளையாடுவதனால் என்று நெட்டிசன்ஸ் சொல்கின்றனர். இதுவரை ஆரியை எதிர்த்த அனைத்துப் போட்டியாளர்களும் ஒருவர் பின் ஒருவராக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகை ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி ஆகியோர் ஆரிக்கு எதிராக புரணி பேசுகின்றனர். இதனால், அடுத்த டார்கெட் அவர்கள்தானோ என்கிற முணுமுணுப்பு எழுந்துள்ளது. எப்படியும் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வெடி காத்திருக்கிறது.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version