டிவி

விஜய் டிவி தொகுப்பாளராக பிக்பாஸ் விஜே அர்ச்சனா… ஜீ தமிழ் சேனலுடன் மோதலா?

Published

on

விஜே அர்ச்சனா புதிய நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குவதன் மூலம் விஜய் டிவி-யின் தொகுப்பாளர் ஆக ஆகியுள்ளார்.

வருகிற பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் டிவி-யில் ‘காதலே காதலே’ என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை பிக்பாஸ் புகழ் விஜே அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் விஜய் டிவி-யிலேயே அர்ச்சனா ஐக்கியமாகிவிட்டாரா? எனவும் ஜீ தமிழ் உடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விலகினாரா? எனவும் கேள்விகள் சமுக வலைதளங்களில் எழத் தொடங்கின.

ஆனால், உண்மைக் காரணத்தை விஜே அர்ச்சனாவே விளக்கமாகக் கொடுத்துள்ளார். இதுகுறித்து விஜே அர்ச்சனா கூறுகையில், “நான் ஜீ தமிழ் சேனலில் ஒப்பந்ததார தொகுப்பாளராக மட்டுமே பணியாற்றினேன். முழு நேர ஊழியர் கிடையாது. அதாவது ஒரு நிகழ்ச்சிக்கு ஒப்பந்தத்தின் பெயரில் மட்டும் தொகுத்து வழங்குதல். மாத சம்பளம் வாங்கவில்லை. இதனால், அந்த சேனலில் எனக்கு எந்த பொறுப்பும் கிடையாது.

பிக்பாஸ் அழைப்பு வருவதற்கு முன்னரே ஜீ தமிழ் சேனலில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கவில்லை. கொரோனா காரணமாக நிகழ்ச்சிகளும் இல்லை. மாத சம்பளம் பெறும் ஊழியர் இல்லை என்பதால் பிக்பாஸ் அழைப்பு வந்த போது குடும்பத்துடன் மட்டும் அலோசித்துவிட்டு ஒப்புக் கொண்டேன். இப்போது விஜய் டிவி-யிலேயே பிக்பாஸ்-க்குப் பின் வாய்ப்பு கிடைத்திருப்பதால் தொகுப்பாளர் ஆக இணைந்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version