டிவி
சரியாக மாலை 4, 5 மணி என போஸ்ட் போடுவது ஏன்?- சீக்ரெட் பகிர்ந்த ‘பிக்பாஸ்’ ஷிவானி
பிக்பாஸ் ஷிவானி நாரயாணன் இன்ஸ்டாகிராம் தளத்தில் தினமும் சரியாக மாலை 4 மணி, 5 மணி என போஸ்ட போடுவதற்கான காரணம் குறித்துப் பேசியுள்ளார்.
பிக்பாஸ் மூலம் புகழ் பெறுவதற்கு முன்னரே இன்ஸ்டாகிராம் மூலம் புகழ் பெற்றவர் ஷிவானி நாராயணன். ஷிவானி எப்போதுமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலை 4 மணி, 5 மணி என துள்ளியமாக தனது கவர்ச்சிகர புகைப்படங்களை போஸ்ட் செய்வார். இதுபோல், சரியாக மாலை புகைப்படங்களை போஸ்ட் செய்வதில் உள்ள பின்னணி குறித்து முதன்முறையாகப் பேசி உள்ளார் ஷிவானி.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தபின் ஷிவானி பெரிதாக எந்தவொரு பேட்டியையும் தரவில்லை. வழக்கமாக மொய்க்கும் யூ-ட்யூப் சேனல்களை பெரிதாக ஷிவானி கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு ஷிவானி பேட்டி கொடுத்துள்ளார். அதில் தனது இன்ஸ்டாகிராம் சீக்ரெட் குறித்தும் பகிர்ந்துள்ளார்.
ஷிவானி கூறுகையில், “எல்லாரும் நான் இன்ஸ்டாகிராமில் மாலை 4 அல்லது 5 மணிக்கு துள்ளியமாக போஸ்ட் போடுவது பின் என்ன சீக்ரெட் இருக்கிறது எனக் கேட்கிறார்கள். நிறைய பேர் அதனாலே நான் போடும் போஸ்ட் வைரல் ஆகிறதா என்றெல்லாம் கேட்கிறார்கள். உண்மையில் நான் இரவு தாமதமாகவே தூங்குவேன். அதனால் பகலிலும் தாமதமாகவே எழுந்து கொள்வேன். இதனால் நான் கண் முழித்து கொஞ்ச நேரத்தில் செல்போன் எடுப்பேன்.
அப்படி எழுந்து போஸ்ட் போடுவதால் தான் மாலை 4 மணி ஆகிறது. மற்றபடி நான் அந்த நேரத்தில் போஸ்ட் போட எந்தக் காரணமும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.