சினிமா செய்திகள்

பிக்பாஸ்-ல் கமலிடம் சொல்லியதை செய்துகாட்டிய ரியோ ராஜ்..!- வைரல் வீடியோ

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகர் ரியோ ராஜ் தான் பிக்பாஸ் வீட்டுக்குள் கமல்ஹாசனிடம் சொல்லியதை வெளியே வந்தவுடன் நிறைவேற்றி உள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வாரத்தில் தொகுத்து வழங்கும் நடிகர் கமல் ஹாசன் போட்டியாளர்களிடம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் என்ன செய்வீர்கள்? எனக் கேட்டிருந்தார். அதில் பலரும் பல விதமான ஆசைகளை, விருப்பங்களைப் பதிலாகத் தந்திருந்தனர். அப்போது நடிகர் ரியோ ராஜ் தனக்கு பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதும் ஒரு காட்டுக்குள் சென்று அமைதியாக ஓய்வாக இருந்துவிட்டு வர வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

சொல்லியது போலவே பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய சில நாட்களுக்குள் தனது ஜீப்பை எடுத்துக் கொண்டு காட்டுப் பயணத்துக்குச் சென்றுள்ளார் ரியோ. பிக்பாஸ் இறுதி நாள் நிறைவு நிகழ்ச்சியின் போது கடைசி ஐந்து போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு பரிசை வழங்கிய கமல் ரியோவுக்காக டென்ட் அமைக்கும் கூடாரம் ஒன்றை பரிசாக அளித்தார். ரியோவின் காட்டுப் பயண சாகசத்துக்காக அந்தப் பரிசை கமல் அளித்ததாகக் கூறினார்.

seithichurul

Trending

Exit mobile version