டிவி

இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறுவது இவர்தான்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Published

on

இன்று பிக்பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் நபர் குறித்த உறுதியான செய்திகள் வெளியாகி உள்ளன.

75 நாட்களைக் கடந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது. இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் வீட்டினுள் 10 போட்டியாளர்கள் உள்ளனர். இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து தொகுப்பாளர் அர்ச்சனா வெளியேறுவார் எனத் தெரிகிறது. அர்ச்சனா வெளியேற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றே கூறலாம்.

கடந்த வாரம் கேப்டன்ஸ் டாஸ்க்-க்காக வென்றவர் அர்ச்சனா. வரும் வாரம் கேப்டன் ஆக பதவி ஏற்கப்போகிறவர் இந்த வாரம் கண்டிப்பாக வெளியேற மாட்டார் என்றே ரசிகர்கள் நினைத்து வந்தனர். ஆனால், இந்த வாரம் அர்ச்சனா குறைவான ஓட்டுகளைப் பெற்று வெளியேறுகிறார். இன்னும் 3 வாரங்களே இருப்பதால் போட்டி அடுத்தடுத்து மிகவும் கடுமை ஆனதாக மாறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version