சினிமா செய்திகள்
வெளிய வந்த அடுத்த நாள் புதுப்படத்துக்கான பூஜை… பிஸியான பிக்பாஸ் ஆரி
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அடுத்த நாளே புது படம் ஒன்றுக்கான பூஜையை முடித்து படப்பிடிப்புகளில் இறங்கிவிட்டார் பிக்பாஸ் ஆரி அர்ஜுனன்.
பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமடைந்துவிட்டார் ஆரி. பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போதே 3 படங்களுக்கான போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக், டைட்டிள் வெளியீடு என கலக்கிக் கொண்டிருந்தார். தற்போது உற்சாகமாக வெளியில் வந்ததும் அடுத்த படத்துக்கான பூஜையை போட்டு படப்பிடிப்பை தொடங்கி உள்ளார்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடன் இணை இயக்குநராகப் பணியாற்றிய அபின் என்பவர் ஆரி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் களம் இறங்க உள்ளார். இந்தப் படத்துக்கான பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. சீரியல்களில் இருந்து சினிமாவுக்குப் பயணித்த வித்யா பிரதீப் இந்தப் படத்தில் ஆரிக்கு ஜோடி ஆகியுள்ளார். இந்தப் படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் ஆரி.
படத்துக்கு இசை ஸ்டெர்லின் நித்யா மற்றும் தயாரிப்பு ஷெளரியா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம். ஆரிக்கு அடுத்தடுத்து எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான், பகவான், அலேகா ஆகிய மூன்று படங்கள் வெளியீட்டுக்கு வரிசையாகக் காத்திருக்கின்றன.
#ShauryaProductions #AbinFilmFactory Maiden Venture Started *ing #BigBoss4Tamil #TitleWinner @Aariarujunan Dir by @abindirector #AariArjunanAsCOP @Vidya_actress #SterlinNithya #PVKarthik #Kamalanathan @Lyricist_Vivek #ArulSiddarth #ShakthiSaravanan #Viswanathan @onlynikil pic.twitter.com/zy0cHeJqud
— Nikil Murukan (@onlynikil) January 19, 2021