தமிழ்நாடு

மரணத்திற்கு முன் பிபின் ராவத் பேசிய கடைசி வார்த்தை! நேரில் பார்த்தவர் பேட்டி!

Published

on

ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் கடைசியாக பேசியது என்ன என்பது குறித்து நேரில் பார்த்த ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று திடீரென விபத்துக்குள்ளானதில் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண்சிங் மட்டும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இந்த விபத்தை நேரில் கண்ட உள்ளூர் வாசியான சிவகுமார் என்பவர் பேட்டி ஒன்றில் கூறியபோது, ‘நான் தேயிலை தோட்டத்தில் தேயிலை பறித்து கொண்டிருக்கும்போது பெரிய சத்தத்துடன் ஹெலிகாப்டர் ஒன்று வெடித்து தீப்பிடித்து எரிந்ததை கண்டேன். உடனே நானும் அங்கிருந்தவர்களும் உடனடியாக ஹெலிகாப்டர் விழுந்த இடத்துக்கு விரைந்து சென்றோம்.

உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தகவல் தெரிந்து வந்தனர். விபத்தில் காயம் அடைந்து உயிருக்கு போராடிய மூன்று பேர்களை நாங்கள் பார்த்தோம். காயமடைந்தவர்களில் ஒருவரை நாங்கள் வெளியே எடுத்த போது அவர் தண்ணீர் கேட்டார். அவரை மீட்புக் குழுவினர் அழைத்துச் சென்றனர். பிறகுதான் அவர் முப்படை தளபதி பிபின் ராவத் என்று எனக்கு தெரிந்தது.

இந்திய நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருந்த பிபின் ராவத் கடைசியாக மரணத்திற்கு முன் தண்ணீர் கேட்டார் என்ற தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version