தமிழ்நாடு

கையெடுத்து கும்பிட்டார் பிபின்ராவத்: கடைசி நிமிடங்கள் குறித்து மீட்புப்பணியினர் உருக்கம்!

Published

on

முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் கடைசி நேரத்தில் கையெடுத்து கும்பிட்டார் என மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்த சிவகுமார் என்பவர் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் சமீபத்தில் குன்னூர் அருகே காட்டேரி என்ற பகுதியில் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் பலியாகினர்.

பலியானவர்கள் உடல்கள் நேற்று முன்தினம் டெல்லி எடுத்துச் செல்லப்பட்டது என்பதும் பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவியின் உடல்கள் ஒரே தகனத்தில் வைத்து இறுதி சடங்கு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டபோது மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த சிவகுமார் என்பவர் சமீபத்தில் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பிபின் ராவத் அவர்களை நான் பார்த்தவுடன் என்னிடம் தண்ணீர் கேட்டார். நாங்கள் உங்களை கண்டிப்பாக காப்பாற்றி விடுவோம் என்று அவரிடம் சொன்னபோது அவர் கையெடுத்துக் கும்பிட்டார். ஆம்புலன்சில் ஏறுகிற வரை அவர் கையெடுத்து கும்பிட்டபடியே இருந்தார்.

அதன் பின்னர் மூன்று மணி நேரம் கழித்து இராணுவ அதிகாரிகள் அவர் இறந்துவிட்டார் என்று சொன்ன போது மிகவும் வேதனையாக இருந்தது என குன்னூரை சேர்ந்த சிவகுமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version