சினிமா

பவானி ரெட்டி 2வது திருமணம் செய்தாரா? – உண்மையை உடைத்த சகோதரி…

Published

on

தெலுங்கில் சில சீரியல்களில் நடித்தவர் பவானி ரெட்டி. தமிழிலும் ரெட்டை வால் குருவி, பாசமலர், தவனை முறை வாழ்க்கை,சின்ன தம்பி, ராசாத்தி, அன்பே சிவம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளிடம் பிரபலமானார்.

இவர் 2017ம் ஆண்டு இவருடன் சீரியலில் நடித்த பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் இடையே சில பிரச்சனைகள் இருந்ததால் பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சோகத்தை மறக்க பவானி ரெட்டி மீண்டும் சீரியலில் நடிக்க துவங்கினார்.

bhavani

அதன்பின் பெற்றோரின் வற்புறுத்தலால் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரும் ஒரு சீரியல் நடிகர்தான். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வந்தார். சில சமயம் கொஞ்சம் கவர்ச்சியாகவும் அவர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

தற்போது பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் அவரும் ஒரு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார்.

bhavani

இந்நிலையில், பவானி ரெட்டியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் தங்கை சிந்து ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.

பவானி தனது கணவருடன் மகிழ்ச்சியாகவே இருந்தார். கணவரின் மறைவுக்கு பின் அவர் 2வது திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒருவரை விரும்பினாள். ஆனால், அதுவும் கை கூடவில்லை. தற்போது அவர் சீரியலில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் என அவர் கூறியுள்ளார்.

 

Trending

Exit mobile version