வணிகம்
ஏர்டெல் மொபைல் கட்டணங்கள் டிசம்பர் 3 முதல் 42% வரை உயர்வு! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி…!
பார்தி ஏர்டெல் நிறுவனம் டிசம்பர் 3-ம் தேதி முதல் தங்களது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணங்கள் உயரும் என்று தெரிவித்துள்ளது.
வோடாஃபொண் ஐடியா கட்டண உயர்வு அறிவிப்பைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தங்களது கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இதனால் பார்தி ஏர்டெல்லின் புதிய ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்கள் முன்பு இருந்ததை விட 42 சதவீதம் வரை அதிகரிக்கும்.
ஒரு நாளைக்குக் குறைந்தது 50 பைசா முதல் 2.85 ரூபாய் வரை பார்தி ஏர்டெல் வாடிக்கையாளர்களின் செலவுகள் அதிகரிக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இந்த 42 சதவீத கட்டண உயர்வு அன்லிமிட்டெட் திட்டங்கள் பயன்படுத்துபவர்களுக்கு அதிகளவில் இருக்கும்.