தமிழ்நாடு

இனி செப்டம்பர் 11 ‘மகாகவி நாள்’.. மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Published

on

நடப்பு ஆண்டு முதல் செப்டம்பர் 11-ம் தேதி மகாகவி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் எனத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பாரதியார் நினைவு நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், “பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ம் தேதி இனி ‘மகாகவி நாளாக’ கடைப்பிடிக்கப்படும்.

மகாகவி நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதைப் போட்டி நடத்தில் பாரதி இளங்கவிஞர் விருது வழங்கப்படும்.

பாரதியாரின் பாடல்கள், கட்டுரைகளைத் தொகுத்து மதில் உறுதி வேண்டும் என்ற புத்தகம் வழங்கப்படும்.

போட்டியில் வெற்றிபெறும் ஒரு மாணவி மற்றும் மாணவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்” எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version