கட்டுரைகள்

முண்டாசு கவிஞனுக்குப் பிறந்தநாள்! யாருக்கும் தெரியாத ஒரு சம்பவம்!!

Published

on

இன்று டிசம்பர் 11 ஆம் தேதி. பாரதம் போற்றும் பாரதியாரின் பிறந்தநாள். முண்டாசு கவிஞன் என்று அழைக்கப்படும் பாரதியார், தமிழுக்கும் தமிழகத்திற்கும் புத்துயிர் அளித்தவர். தமிழ் மொழியை உலகறியச் செய்தவர். யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றவர். தமிழுக்கு உயிரூட்டியவர்.

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என குழந்தைகளைக் கொஞ்சுவதிலும், உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொடுதடி என மனைவியிடம் உயிர்கலப்பானதிலும் பாரதியை மிஞ்சி எவரும் இல்லை. தன் வீடு, தன் குடும்பம் என்று இல்லாமல் அனைத்து தரப்பு மனிதர்களும் இறையருளின் வடிவமே என்று ஆன்மீகத்திலும் சுடர்விட்டவர் பாரதியார். இதையே தான் காக்கை சிறகினிலே நந்தலாலா என்ற பாடலில் உட்பொருளாக விவரித்திருப்பார். அந்தப் பாடல்,

காக்கை சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா –
நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

பாரதியார் இவ்வளவு சித்தி பெற்றவர் என்பது அவருடைய நெருங்கியவர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அரசியல், மொழி, இனம், மதம், நாடு, உலகம் என அனைத்திலும் உயிர்கலப்பு செய்தவர்.

seithichurul

Trending

Exit mobile version