சினிமா

வைரமுத்து விவகாரம்: செய்தியாளரை ஒருமையில் பேசிவிட்டு பாதியிலேயே கிளம்பிய பாரதிராஜா!

Published

on

பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சின்மயிக்கு ஆதரவு பெருகுவது போல தற்போது வைரமுத்துவுக்கும் சிலர் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர்.

வைரமுத்து மீது சின்மயி மட்டுமல்லாமல் வேறு சிலரும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அதே போல சின்மயி வைரமுத்து மீது மட்டுமல்லாமல் வேறு சிலபேர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். ஆனால் வைரமுத்து, சின்மயி விவகாரம் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிரபல தமிழ் இயக்குநர் பாரதிராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கவிஞர் வைரமுத்து மீது சின்மயி கூறியிருக்கும் பாலியல் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. உடனே ஆவேசமடைந்த பாரதிராஜா செய்தியாளர்களை ஒருமையில் பேசினார். நீ பார்த்தியா? நீ பார்த்தியா. ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது. கேள்விப்பட்டதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என கூறிவிட்டு செய்தியாளர்கள் சந்திப்பை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு கிளம்பிவிட்டார்.

seithichurul

Trending

Exit mobile version