சினிமா செய்திகள்

இயக்குனர் ஜனநாதன் மறைவிற்கு, பாரதிராஜா, கார்த்தியின் இரங்கல் டுவீட்!

Published

on

பிரபல இயக்குனர் எஸ்பி ஜனநாதன் அவர்கள் இன்று காலை காலமானதை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலர் தொடர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் பாரதிராஜா தனது டுவிட்டரில் எஸ்பி ஜனநாதன் மறைவு குறித்து கூறியதாவது:

நம்பிக்கையும்..
பிரார்த்தனைகளும்..
கை நழுவிச் சென்றாலும்
இயற்கை அன்னை
ஒரு போதும் கைவிடாது
உன்னைத் தழுவிக்
கொள்ளும்..
சென்று வா..
செந்நிறத் தோழனே.

இந்த நிலையில் சற்று முன் நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து ஜனநாதன் குறித்து கூறியதாவது: மக்கள் நலன், பேசப்படாத சமுதாய பிரச்சனைகள், அதற்கான தீர்வு என்று தன் படைப்புகளிலும் வாழ்க்கையிலும் தொடர்ந்து பேசியவர் ஜனநாதன் அவர்கள். அவரின் பெயரை உச்சரிக்கும் போது அனைவரிடமும் பாசத்தையும் மரியாதையையும் பார்க்கமுடியும். அவரின் மறைவு பெரும் அதிர்ச்சி. குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என கார்த்தி கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version