சினிமா செய்திகள்

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும்: பாஜக தலைவர் அண்ணாமலை

Published

on

இசைஞானி இளையராஜா, பிரதமர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டுப் பேசியது குறித்த சர்ச்சை எழுந்து வரும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இளையராஜாவுக்கு பாரத ரத்னா கொடுக்கவேண்டும் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் வெளியான புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை எழுதிய இளையராஜா அம்பேத்கரின் கனவுகளை மோடி நிறைவேற்றுகிறார் என்றும் மோடியும் அம்பேத்கரும் ஒரே சிந்தனையில் உள்ளவர்கள் என்றும் இருவருமே ஏழ்மை நிலையிலிருந்து வந்து மக்களுக்காகப் பாடுபட்டவர்கள் என்றும் எழுதியிருந்தார்.

இளையராஜாவின் இந்த கருத்துக்கு பலர் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர். திரையுலகிலும் கூட ஒரு சில இளையராஜாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தனது கருத்து சரிதான் என்றும் தனது கருத்தை திரும்ப பெற மாட்டேன் என்று கூறிய இளையராஜா நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் என்றும் மோடிக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்ல மாட்டேன் என்றும் அதேசமயம் ஓட்டு போட வேண்டாம் என்று சொல்ல மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் திடீரென இசைஞானி இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது கொடுத்து வேண்டும் என்றும் இது குறித்து தலைமைக்கு கடிதம் எழுதவும் தமிழக பாஜக தயாராக இருக்கிறது என்றும் கூறிய அண்ணாமலை, நானும் கருப்பு திராவிடதான் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version