சினிமா செய்திகள்

பாக்யராஜ் குடும்பத்தினர்களுக்கு கொரோனா: சாந்தனு அதிர்ச்சி தகவல்

Published

on

இந்திய திரை உலகின் மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியரும் இயக்குநருமான கே பாக்யராஜ் மற்றும் அவருடைய மனைவியும் நடிகையுமான பூர்ணிமா பாக்யராஜ் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை பாக்யராஜின் மகன் சாந்தனு பாக்யராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

தனது பெற்றோர் பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பெற்றோர் இருவரும் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் விரைவில் குணமாக அனைவரும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொள்வதாகவும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகிய இருவருடனும் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து உடனடியாக பரிசோதனை பரிசோதனை செய்து கொள்ளுமாறு சாந்தனு அறிவுறுத்தியுள்ளார்.

சாந்தனுவின் இந்த ட்விட்டை அடுத்து பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா ஆகிய இருவரும் விரைவில் நலமாக வேண்டும் என்று திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தொடர்ச்சியாக திரையுல பிரபலங்கள் பலரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அந்த பட்டியலில் தற்போது பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் ஆகிய இருவரும் இணைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version