சினிமா செய்திகள்
30 ஆண்டுகளுக்கு பின் வாரிசு நடிகையுடன் நடிக்கும் பாக்யராஜ்!
30 ஆண்டுகளுக்கு பின் வாரிசு நடிகையுடன் கே பாக்யராஜ் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2000 ஆம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இவர் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வரும் நிலையில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்
கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் கே பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இவர்கள் இருவரும் இணைந்து கடந்த 1092 ஆம் ஆண்டு வெளியான ராசுகுட்டி என்ற படத்தில் நடித்து இருந்தனர் என்பதும் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. முப்பது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இந்த படத்தின் மூலம் கே பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா இணைந்து நடிக்கவுள்ளதை அடுத்து இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது
நடிகை ஐஸ்வர்யா, பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள் என்பதும், இவர் ரஜினியின் ‘எஜமான்’, பார்த்திபனின் ‘உள்ளே வெளியே’ உள்பட பல படங்களில் நாயகியாகவும், ஒருசில திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் நடித்துள்ளார்.