Connect with us

சினிமா செய்திகள்

பாடிக்கொண்டு இருந்த பென்னி தயாள்.. தலையில் மோதிய ட்ரோன்.. நடந்தது என்ன?

Published

on

சமீபத்தில் பின்னணி பாடகர் பென்னி தயாள் சென்னையில் நடந்த இசை விழா ஒன்று பாடல் பாடி கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக அவருக்கு விபத்து ஏற்பட்டது. நிகழ்ச்சியை படம் பிடித்துக் கொண்டிருந்த ட்ரோன் ஒன்று பென்னி தயாளின் தலைக்கு மேல் பறந்து வந்து கொண்டிருந்தது. அது அவருடைய தலையின் பின் பகுதியில் எதிர்பாராத விதமாக மோதியது.

இதனால் துணுக்குற்ற பென்னி தயாள், மேடையிலேயே கீழே அமர்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சிறு விபத்திற்கு பிறகு என்ன நடந்தது எப்படி இருக்கிறேன் என்பது குறித்து பென்னி தயாள் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “அந்த விபத்திற்கு பிறகு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னை மிகுந்த சிரத்தையுடன் கவனித்துக் கொண்டனர். அதற்கு அவர்களுக்கு நன்றி. அந்த ட்ரோன் என்னுடைய தலையின் பின் பகுதியில் மோதியது. அதை தடுப்பதற்காக தலையை கையை மேலே கொண்டு சென்ற போது விரல்களிலும் அடிபட்டது. இதிலிருந்து சீக்கிரம் குணமாகி விடுவேன். உங்கள் அனைவரின் அன்புக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

என் பெற்றோருக்கும் நன்றி. இதற்குப் பிறகு எல்லா கலைஞர்களுக்கும் கவனமாக இருக்க வேண்டும் என ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இது போன்ற நிகழ்ச்சிகளில் நீங்கள் பாடி கொண்டிருக்கும் பொழுது, இது போன்ற ட்ரோன் உங்கள் அருகில் வராமல் இருக்கிறதா என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஏனெனில் பாடி கொண்டிருக்கும் பொழுது உங்களுடைய அசைவுகளும் அவர்களுடைய இயக்கமும் ஒரே மாதிரியாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. இதுபோன்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்கள் சான்றிதழ் பயிற்சி பெற்ற ட்ரோன் ஆப்ரேட்டர்களை நியமியுங்கள்.

ஏனெனில் இது போன்ற விபத்து மிகவும் ஆபத்தானது. மூன்றாவது கோரிக்கை நாங்கள் வெறும் கலைஞர்கள் மட்டுமே! விஜய்யோ அஜித் சல்மான்கானோ பிரபாஸோ கிடையாது. நாங்கள் ஏதும் ஆக்ஷன் காட்சிகள் செய்யவில்லை. நாங்கள் பாடல் பாடிக்கொண்டிருக்கிறோம். அதை நீங்கள் நன்றாக படம் பிடித்தால் மட்டும் போதும். இவ்வளவு நெருக்கத்தில் வர வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதை மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்” என அந்த வீடியோவில் பென்னி தயாள் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா5 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!