இந்தியா

மருமகளுக்கு பிளாட் பரிசளித்த மாமனார்.. அடியாட்களை ஏவி தந்தையை கொலை செய்த மகன்..!

Published

on

பெங்களூரைச் சேர்ந்த 70 வயது நபர் ஒருவர் தனது மகனின் மனைவிக்கு பிளாட் ஒன்றை பரிசாக அளித்ததால் ஆத்திரம் அடைந்த மகன் தந்தையை அடியாட்களை வைத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரை சேர்ந்த 70 வயது முதியவர் நாராயணசாமி கடந்த 13ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை தான் நேரில் பார்த்ததாக அவருடைய மகன் மணிகண்டன் காவல்துறையில் தகவல் தெரிவித்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்த விசாரணையின் போது நாராயணசாமி வாக்கிங் சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த இருவர் அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர். இதனை அடுத்து கொலையை நேரில் கண்ட நாராயணசாமி மகன் மணிகண்டன் உள்பட பலரிடம் விசாரணை செய்தபோது மணிகண்டனின் வாக்குமூலம் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்தார்கள்.

இதனை அடுத்து மணிகண்டனிடம் காவல்துறி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்த போது தந்தையை தானே கொலை செய்ததாகவும் இதற்காக ஒரு கோடி ரூபாய் அடியாள்களிடம் கொடுத்து கொலை செய்ய சொன்னதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். 32 வயதான மணிகண்டன் வேலையில்லாமல் இருந்தார் என்றும் தந்தை செலவுக்கு பணம் கொடுக்கவில்லை என்பதால் அவரை கொலை செய்தால் அவருடைய சொத்து முழுவதும் தனக்கு வரும் என்றும் திட்டமிட்டு கொலை செய்ததாக தெரிகிறது. மறைந்த நாராயணசாமிக்கு பெங்களூரில் சொந்தமாக 28 பிளாட்டுக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மணிகண்டன் ஒரு பெண்ணை திருமணம் செய்து நிலையில் தனது மனைவியை அவர் கொலை செய்ததாக கடந்த 2013 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் அந்த வழக்கிலிருந்து விடுபட்டு 2020 ஆம் ஆண்டு அர்ச்சனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அர்ச்சனா ஒரு கைக்குழந்தையுடன் இருக்கும் நிலையில் அவரையும் வீட்டை விட்டு துரத்தியதாக தெரிகிறது. இதனால் கைக்குழந்தையுடன் கஷ்டப்பட்ட அர்ச்சனாவுக்கு உதவி செய்தற்காக மணிகண்டனின் தந்தை நாராயணசாமி ஒரு பிளாட் ஒன்றை பரிசளித்து உள்ளார். இது மணிகண்டனுக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர் தந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

ஒரு கோடி மற்றும் ஒரு பிளாட் என அடியாட்களிடம் பேரம் பேசி தனது தந்தையை கொலை செய்துள்ளார். அதன் பிறகு அவரது நடவடிக்கை சரி இல்லை என்பதால் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்த போது மணிகண்டன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். கொலை செய்ய அவரால் பணி அமர்த்தப்பட்ட இரண்டு அடியாட்களும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருமகளுக்கு பிளாட் ஒன்றை பரிசளித்த முதியவரை அவரது மகனே அடியாட்களை ஏவி வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version