Connect with us

இந்தியா

காதலித்த பெண்ணை பழிவாங்க மிக்ஸியில் வெடிகுண்டு வைத்து அனுப்பிய வாலிபர்.. நிகழ்ந்த விபரீதம்

Published

on

ஒரு தலையாக ஆன்லைனில் காதலித்த பெண்ணை பழிவாங்குவதற்காக வாலிபர் ஒருவர் மிக்ஸியில் வெடிகுண்டு வைத்து அனுப்பிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் 28 வயதான வாலிபர் ஒருவர் 32 வயது பெண் ஒருவரை சமூக வலைதளம் மூலம் காதலித்ததாக தெரிகிறது. ஆனால் அந்த காதலை அந்த பெண் ஏற்கவில்லை. இந்த நிலையில் அந்தப் பெண்ணைக் கவர்வதற்காக ஒருசில பரிசுப் பொருள்களை கூரியர் மூலம் வாலிபர் அனுப்பி உள்ளார். ஆனால் அந்த பெண் எந்த பொருளையும் பெற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது காதலை ஏற்க மறுத்த பெண்ணை பழி வாங்குவதற்காக மிக்ஸி ஒன்றை தனது பெயரை குறிப்பிடாமல் அந்த பெண்ணுக்கு அனுப்பி இருந்தார். இந்த நிலையில் கூரியர் அலுவலர் அந்த பார்சலை எடுத்துக்கொண்டு அந்த பெண்ணிடம் சென்று வழங்கியபோது அந்த பெண் அந்த பார்சலை ஏற்க மறுத்துள்ளார். பார்சலை அனுப்பியவரிடமே திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் கூரியர் அலுவலர் அந்த மிக்சியை அலுவலத்திற்கு கொண்டு வந்து அந்த மிக்ஸி வேலை செய்கிறதா என்று சோதனை செய்துள்ளார். அப்போது அந்த மிக்ஸி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதனையடுத்து காவல்துறையினர் இது குறித்து ஆய்வு செய்த போது பெண்ணை பழி வாங்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே உள்ளே வெடி பொருளை வைத்து மிக்ஸியை இயக்கும்போது வெடிக்கும் வகையில் செட் செய்தது தெரியவந்தது.

முதலில் இது பயங்கரவாத வழக்கு என்று சந்தேகப்பட்ட நிலையில் அதன் பிறகு பெண்ணை பழி வாங்குவதற்காக செய்த சம்பவம் என்பது புரிய வந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பெண்ணுக்கு மிக்ஸி அனுப்பிய வாலிபரை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மிக்சி வெடித்ததால் படுகாயம் அடைந்த ஊழியர் தற்போது குணமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!