இந்தியா

நிர்வாண நடனம், மதுவிருந்து: ஐடி பெண்கள் உள்பட 35 பேர் கைது!

Published

on

பெங்களூர் அருகே நிர்வாண நடனம் மற்றும் மது விருந்தில் கலந்து கொண்ட ஐடியில் பணிபுரியும் பெண்கள் உள்பட 35 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம், கர்நாடகம் உள்பட ஒருசில மாநிலங்களில் ரேவ் பார்ட்டி என்று கூறப்படும் நிர்வாண நடனங்கள் நடத்தும் பார்ட்டி அதிகரித்து வருகிறது. சென்னை, கோவை உள்ளிட்ட ஒரு சில இடங்களிலும் பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இந்த பார்ட்டி சட்ட விரோதமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெங்களூரு அருகே ஆனெக்கல் என்ற இடத்தில் தனியார் சொகுசு விடுதி ஒன்றில் இரவு பார்ட்டி நடைபெற்று வருவதாகவும், அதில் மது விருந்து மற்றும் நிர்வாண நடனம் நடைபெற்று வருவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த சொகுசு விடுதியை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு ஐடி நிறுவன ஊழியர்கள், மாணவர்கள், கல்லூரி பெண்கள் என 40-க்கும் மேற்பட்டோர் மது விருந்துகளில் கலந்து நிர்வாணமாக நடனம் ஆடிக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து போலீசாரை கண்டதும் ஒரு சிலர் தப்பித்து ஓட முயற்சித்தனர். ஆனால் போலீசார் அவர்களில் 35 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர் .5 பேரும் தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. கைது செய்யப்பட்டவர்களில் கல்லூரி மாணவிகள் மற்றும் ஐடியில் பணிபுரியும் பெண்களும் அடங்குவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த பார்ட்டியில் கலந்து கொண்டு தப்பித்தவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதாகவும் அந்த சொகுசு விடுதியில் இருந்து மது பாட்டில்கள் போதைப் பொருட்கள் மற்றும் வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிகழ்ச்சிக்கு செல்போன் செயலி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு இந்த ரேவ் பார்ட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.

Trending

Exit mobile version