செய்திகள்
சொகுசு விடுதியில் தங்கும் சசிகலா
வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாகி வருவதால் அமமுக நிர்வாகிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் பெங்களுரூ பார்ப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது சிறை தண்டனை நிறைவடையும் நிலையில் வரும் 27 ஆம் தேதி விடுதலையாவதாக சிறை நிர்வாகம் தெரிவித்தது. இந்த நிலையில் சசிகலாவின் விடுதலையன்று வெகுநேரம் ஆகக்கூடும் என்பதால் கர்நாடக – தமிழக எல்லையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையான ஜூஜூவாடி பகுதியில் முதல் பெருத்த வரவேற்பு செய்யப்படும் என அமமுக நிர்வாகிகள் கூறினர். சூளேரியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சசிகலா தங்குவதற்கு நிர்வாகிகள் புக்கிங் செய்தததாக உளவுத்துறை போலீசார் அரசுக்கு தகவல் கூறினர். அங்கு இரவு தங்கி விட்டு மறுநாள் காலை 28 ஆம் தேதி ஓசூரில் இருந்து புறப்பட்டு வேலூர், கிருஷ்ணகிரி மார்கம் வழியாக சென்னை வருகிறார் என அமமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் 5௦ மேற்பட்ட இடங்களில் சிறப்பு வரவேற்புகள் அளிக்க போவதாகத் தெரிவித்தனர்.