இந்தியா
ரூ.20 கோடிக்கு நாய் வாங்கிய தொழிலதிபர்.. ஏசி அறையில் வைத்து வளர்க்க திட்டம்!
பெங்களூரு தொழிலதிபர் ஒருவர் 20 கோடி ரூபாய்க்கு நாய் குட்டி ஒன்றை வாங்கி உள்ள நிலையில் அந்த நாயை வளர்ப்பதற்காக தனி ஏசி அறையை தயார் செய்து இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பணக்காரர்கள் செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பார்கள் என்பதும் குறிப்பாக லட்சக்கணக்கில் நாய்க்குட்டியை வாங்கி வளர்ப்பது அதிகரித்து வருகிறது என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 20 கோடி ரூபாய்க்கு ஒன்றரை வயது நாயை வாங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒன்றரை வயது உடைய அந்த நாய்க்கு கடபோம் ஹைடர் என்று பெயர் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த நாய்க்கு அவரது வீட்டில் ஒரு தனி அறையை ஒதுக்கிக் இருப்பதாகவும் அந்த அறையில் ஏசி உள்ளிட்ட வசதியையும் அவர் செய்து கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த வகை நாயை திருவனந்தபுரத்தில் நடந்த நாய் கண்காட்சியில் பார்த்ததாகவும் அந்தக் கண்காட்சியில் இந்த நாய் 32 பதக்கங்களை வென்றது என்றும், எனவே அந்த நாயை வாங்க வேண்டும் என்ற விருப்பம் தனக்கு ஏற்பட்டதாகவும் சதீஷ் தனது பேட்டியில் கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே பல நாய்களை வளர்த்து வந்தாலும் இந்த நாள் மிகவும் சிறப்பானது என்றும் எனவே தான் அதை 20 கோடி ரூபாய் செலவு செய்து வாங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.