இந்தியா

மாட்டிறைச்சிக்கு தடை: கர்நாடக அரசு தீவிர ஆலோசனை!

Published

on

அண்டை மாநிலமான கர்நாடகாவில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டு தற்போது எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு மாட்டிறைச்சி விற்பதற்கும், வைத்திருப்பதற்கும் தடை விதிக்க தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

கர்நாடக பசு வதை மற்றும் கால்நடை பாதுகாப்பு மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான மனு குறித்து மாநில அரசு விவாதித்து வருகிறது. நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசின் பசு பாதுகாப்பு பிரிவு குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்றதாக கர்நாடகாவின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் சி.டி.ரவி கூறியுள்ளார்.

மேலும், ஆகஸ்ட் 28-ஆம் தேதி, பசு பாதுகாப்பு பிரிவு குறித்த குறிப்பாணை ஒன்றை முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவிடம் கொடுத்துள்ளோம். அதில், 2010-ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் மாட்டிறைச்சி தடை செய்ய பாஜக அரசு முயன்றது, ஆனால் அப்போதைய ஆளுநர் இந்த மசோதாவை நிராகரித்தார். இப்போது பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்நிலையில் பசு பாதுகாப்பு பிரிவின் தலைவர் சித்தார்த் கோயங்கா எடியூரப்பாவிடம் கடுமையான சட்டத்தை கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டார் என அமைச்சர் சி.டி.ரவி கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version