சினிமா செய்திகள்

20-50 பேர்கள் மட்டுமே! ஒரே வாரத்தில் காத்துவாங்கும் ‘பீஸ்ட்’ தியேட்டர்கள்!

Published

on

தமிழகம் முழுவதும் ‘பீஸ்ட்’ படம் திரையிட்ட தியேட்டர்களில் 20 முதல் 50 பேர்கள் மட்டுமே இருப்பதாகவும் பெரும்பாலான திரையரங்குகள் காற்று வாங்குவதால் ஒரு சில தியேட்டர்களில் காட்சி ரத்து செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜய் நடிப்பில் உருவான ‘பீஸ்ட்’ திரைப்படம் கடந்த 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. ஆனால் முதல் காட்சி முடிந்தவுடன் இந்த படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததை அடுத்து ஏற்கனவே முன்பதிவு செய்து விட்டோமே என்ற காரணத்தினால் பொதுமக்கள் படம் பார்த்தனர்.

ஆனால் நேற்று முதல் அனைத்து திரையரங்குகளிலும் ‘பீஸ்ட்’ காற்று வாங்க தொடங்கிவிட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள முக்கிய திரையரங்கம் உள்பட அனைத்து திரையரங்குகளிலும் 20 முதல் 50 பேர்கள் மட்டுமே படம் பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையே ரீதியில் சென்றால் பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்த வாரத்திற்குள் பெரும்பாலான திரையரங்குகளில் ‘பீஸ்ட்’ படத்தை தூக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் கேஜிஎப் 2 படத்திற்கு நல்ல கூட்டம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version