கிரிக்கெட்

கங்குலிக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு: இன்னும் 14 நாட்களுக்கு டிஸ்சார்ஜ் இல்லை!

Published

on

பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்றும் கல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்றும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தற்போது டெல்டாபிளஸ் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அவருக்கு கூடுதல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலிக்கு லேசான டெல்டா பிளஸ் பாதிப்பின் அறிகுறி மட்டுமே இருந்ததாகவும் இதனை அடுத்து அவர் வீட்டு தனிமையில் 14 நாட்கள் இருப்பார் என்றும் அதன்பின்னரே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலிக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version