இந்தியா

கிரிக்கெட் வீரர்கள் மாடு, பன்றி இறைச்சி உண்ணக்கூடாதா? பிசிசிஐ விளக்கம்!

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாடு மற்றும் பன்றி இறைச்சிகளை உண்ணக்கூடாது என்று பிசிசிஐ நிபந்தனை விதித்ததாக கூறப்பட்டதால் இதுகுறித்த செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எந்த உணவை உண்ண வேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் தனிப்பட்ட உரிமை என்றும் அந்த உரிமையில் பிசிசிஐ தலையிடுவது தேவையில்லாத விஷயம் என்றும் பல ஊடகங்கள் கருத்து தெரிவித்தன என்பதும், சமூக வலைதளங்களில் இது குறித்து காரசாரமான விவாதங்கள் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்த செய்திக்கு பிசிசிஐ விளக்கம் அளித்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்தியா என்பது ஒரு மதச்சார்பற்ற நாடு என்றும் வீரர்களின் உணவு விஷயத்தில் பிசிசிஐ எப்படி தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹலால் செய்யப்பட்ட இறைச்சி மற்றும் மற்ற இறைச்சியை சாப்பிடுவது தொடர்பான விஷயத்தில் பிசிசிஐ எந்த பங்கும் வகிக்கவில்லை என்றும் இதுகுறித்து எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாடு மற்றும் பன்றி இறைச்சி உண்ணக்கூடாது என்று வெளியான செய்தி முற்றிலும் வதந்தி என்றும் அது குறித்து எந்தவிதமான நிபந்தனையும் விதிக்கவில்லை என்றும் பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version